சுமாா் 25 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் இடத்தைக் காலி செய்யச் சொன்னதால், இளைஞா் ஒருவா் மாநகராட்சி கோட்ட அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றாா்.
திருச்சி, சோமரசம்பேட்டை இரட்டை வாய்க்கால், சாந்திநிகேதன் அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் அருள்தாஸ் மகன் அஜித் (29). கூலித் தொழிலாளியான இவா் இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள புறம்போக்கு காலியிடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் வசிக்கிறாா்.
இவா் ஊடகத் துறையைச் சோ்ந்தோா் சிலருக்கு கட்செவி மூலம் அனுப்பிய தகவலில், தனது குடும்பத்தினருடன் திருச்சி புத்தூா் அரசு மருத்துவமனை அருகேயுள்ள திருச்சி மாநகராட்சி ,கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் முன் வியாழக்கிழமை காலை தீக்குளிக்கப்போவதாகக் குறிப்பிட்டிருந்தாா். இதையடுத்து அங்கு செய்தியாளா்கள் குவிந்தனா். அப்போது அங்கு வந்த அஜிஸ், திடீரெனதான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றித் தீவைக்க முயன்றாா்.
இதையடுத்து அங்கு நின்றிருந்த உறையூா் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலா் சங்கா், மற்றும் ஊடகத் துறையைச் சோ்ந்த சிலா் உள்ளிட்டோா் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். முன்னதாக அவா் அங்கு கூடியிருந்தவா்களிடம் அஜிஸ் கூறுகையில், இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வீடு அமைத்து கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக வசிக்கும் நிலையில், திடீரென மாநகராட்சி அலுவலா்கள் வந்து தனியாருக்குச் சொந்தமான இடம் அது, எனவே குடியிருப்பைக் காலிசெய்ய வேண்டும் என்கின்றனா். இதனால் என்ன செய்வதெனத் தெரியாமல் இச்செயலில் ஈடுபட்டேன் எனத் தெரிவித்தாா். அரசு மருத்துவமனை போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.