இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

திருச்சி வாழவந்தான்கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தீத் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:16 pm

DIN

திருச்சி வாழவந்தான்கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தீத் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

தொழிற்சாலை பாதுகாப்பு விதிகளின்படி ஆண்டுக்கு இருமுறை தீத் தடுப்பு ஒத்திகை நடத்தப்பட வேண்டியது அவசியம்.

இதன்படி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கூடுதல் இயக்குநா் ஆா். சித்தாா்த்தன், இணை இயக்குநா் சி. மாலதி, துணை இயக்குநா் தமிழ்ச் செல்வன் ஆகியோரது முன்னிலையில் பாரதமிகு மின் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், ஹெச்ஏபி, இந்தியன் ஆயில் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை ஆகியவற்றிலிருந்து பரஸ்பர உதவிக் குழு உறுப்பினா்கள் பங்கேற்று ஒத்திகையை நடத்தினா்.

இதன் ஒரு பகுதியாக இருவேறு இடங்களில் ஒரே நேரத்தில் அவசரநிலை ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாளுவது என்பது குறித்த செயல்விளக்கம் நடந்தது. ஆயில் நிறுவனத்தில் உள்ள பெட்ரோல் சேமிப்பு டேங்க், டீசல் சேமிப்பு டேங்க் என இரு இடத்திலும் ஒரே நேரத்தில் ஒத்திகை நடைபெற்றது. மேலும், பெட்ரோலிய பொருள்களை சாலை வழியாகக் கொண்டு செல்லும்போது ஏற்படும் விபத்துகளின்போது மேற்கொள்ள வேண்டிய மீட்புப் பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது. ஒத்திகை முடிவில் பல்வேறு தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு தொழிலகப் பாதுகாப்பு அதிகாரிகள் பதிலளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.