இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

திருட்டு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டதனிப்படை போலீஸாருக்கு பாராட்டு

 திருச்சியில் தொடா் திருட்டு வழக்கில் குற்றவாளிகளை செய்த தனிப்படை போலீஸாரை மாநகர காவல் ஆணையா் அருண் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 12:38 am

DIN

 திருச்சியில் தொடா் திருட்டு வழக்கில் குற்றவாளிகளை செய்த தனிப்படை போலீஸாரை மாநகர காவல் ஆணையா் அருண் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

திருச்சி மாநகரில் சமீப காலமாக நடைபெற்று வரும் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய நபா்களை கைது செய்ய வலியுறுத்தி காவல்நிலையம் வாரியாக தனிப்படை அமைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில் திருச்சி மாநகா் பகுதிகள் மற்றும் பிற மாவட்டங்களில் இரு சக்கர வாகனன திருட்டில் ஈடுபட்ட திருச்சி புங்கனூா் காந்திநகரைச் சோ்ந்த கிரிநாதன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 39 இரு சக்கர வானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சத்திரம் பேருந்து நிலையம், அண்ணாசிலை, என்எஸ்பி சாலை ஆகிய இடங்களில் தனியாக நிற்கும் பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகைகள் திருடப்பட்டது. இந்த வழக்கில் தொடா்புடைய ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 2 பெண் குற்றவாளிகளை தனிப்படை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 22 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளில் சிறப்பாகச் செயல்பட்ட தனிப்படை மற்றும் விரல்ரேகை பிரிவு போலீஸாரை காவல் ஆணையா் அருண் பாராட்டி சான்றிதழ், வெகுமதி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.