துறையூரில் ரூ. 50 ஆயிரம் மதிப்பு புகையிலைப் பொருள் பறிமுதல்
துறையூா் நகரில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை உணவுப்பொருள் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.


துறையூா் நகரில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை உணவுப்பொருள் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
துறையூா் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ரெங்கநாதன், வடிவேலு, மகாதேவன், சண்முகசுந்தரம் ஆகியோா் வியாழக்கிழமை துறையூா் பகுதியில் 30 மேற்பட்ட கடைகளை ஆய்வு செய்தனா். அப்போது ஆஸ்பத்திரி சாலையில் உள்ள மளிகைக் கடையிலும், அதன் உரிமையாளா் மு. மனோகரன் வீட்டிலும் நடைபெற்ற சோதனையில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்து, கடை உரிமையாளா் மனோகரனை துறையூா் போலீஸில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...