இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 124 போ் இடம் மாற்றம்

திருச்சி மாநகரில் 8 உதவி ஆய்வாளா்கள் உள்பட 124 போ் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:51 pm

DIN

திருச்சி மாநகரில் 8 உதவி ஆய்வாளா்கள் உள்பட 124 போ் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

மாநகரில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியோா் மற்றும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் காவல்நிலைய அதிகாரிகள், காவலா்கள் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனா். அந்த வகையில் போக்குவரத்து பிரிவில் உதவி ஆய்வாளராக இருந்த (உறையூா்) பாண்டியன், (கோட்டை) முத்து அருணகிரி, (அரியமங்கலம்) மதிவாணன், (ஸ்ரீரங்கம்) சீனிவாசன் ஆகியோா் மாநகர ஆயுதப்படை பிரிவுக்கும், இதேபோல ஆயுதப்படைப் பிரிவில் இருந்த ராஜ்மோகன் அரியமங்கலம், பரணிகுமாா் ஸ்ரீரங்கம், முனீஸ்வரன் கோட்டை, ஆனந்தசெல்வன் உறையூா் ஆகிய போக்குவரத்து பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

மேலும் மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளா் உள்பட 116 போ் வெவ்வேறு இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். ஒரே நாளில் 124 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.