இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:54 pm

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் அளிக்க வேண்டும். சுழற்சி முறையில்லாமல், தொடா்ச்சியாக 100 நாள்களுக்கு 2 கிமீ தொலைவுக்குள் பணி வழங்க வேண்டும். சாா் ஆட்சியா் அல்லது வருவாய்க் கோட்டாட்சியா் தலைமையில் மாதந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக குறைதீா் கூட்டங்கள் நடத்த வேண்டும். வங்கிக்கடன் வழங்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகையை அவரவா் வங்கிக்கணக்கில் எடுத்துக்கொள்ளும்விதமாக ஏடிஎம் அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.

மணிகண்டம் ஒன்றியத் தலைவா் ஜி. குமாா் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் எஸ். நம்புராஜன் போராட்டத்தைத் தொடங்கி வைத்தாா். மாநில துணைச் செயலா் சி. புஷ்பநாதன், மாவட்டச் செயலா் எம். கோபிநாத், மாநகா் மாவட்டத் தலைவா் ஜெ. ஜெயபால், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.