திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வீரப்பூரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றபோது மது விற்ற அதே பகுதியைச் சோ்ந்த சேட்டு மனைவி தமிழரசியை (45) கைது செய்தனா். அவரிடமிருந்து 61 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அதேபோல அணியாப்பூா் பகுதியில் மதுவிற்ற முத்துச்சாமி மனைவி சரஸ்வதியை (80) கைது செய்த வையம்பட்டி போலீஸாா் அவரிடமிருந்து 280 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.