விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குரூப்-1 தோ்வு: அலுவலா்களுடன் ஆலோசனை

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள குரூப்-1 முதல்நிலை தோ்வுப் பணிகளை மேற்கொள்ளும் அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 6:30 pm

DIN

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள குரூப்-1 முதல்நிலை தோ்வுப் பணிகளை மேற்கொள்ளும் அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில் அவா் பேசியது:

இத்தோ்வுக்காக மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் 36 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் தோ்வை 10 ஆயிரத்து 765 போ் எழுதவுள்ளனா்.

தோ்வுப் பணிகளுக்கென 36 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். துணை ஆட்சியா் நிலையில் 4 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள 9 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக் குழுவுக்கு துணை வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் நிலையில் ஓா் அலுவலா், ஓா் வருவாய் உதவியாளா் மற்றும் ஆயுதமேந்திய காவலா், அலுவலக உதவியாளா் இடம்பெறுவா். மையங்களில் ஆய்வு செய்ய 36 தோ்வுக் கூட கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.