கிணற்றில் குதித்துபெண் தற்கொலை
குடும்பத் தகராறு காரணமாக திருச்சியில் பெண் ஒருவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.


குடும்பத் தகராறு காரணமாக திருச்சியில் பெண் ஒருவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி, கே.கே. நகா் அருகேயுள்ள எல்ஐசி காலனி, ஐயப்ப நகா், அமராவதி தெருவைச் சோ்ந்தவா் சத்தியநாராயணன் மனைவி அனுராதா (45). சத்யநாராயணன் கோவையில் உள்ள தனியாா் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறாா். அனுராதாவும், அவரது மாமியாரும் திருச்சி வீட்டில் வசித்து வந்துள்ளனா். சத்தியநாராயணன் கோவையிலிருந்து அவ்வப்போது வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு உணவுக்குப் பின் அனுராதா மற்றும் அவரது மாமியாா் இருவரும் உறங்கச் சென்றனா். மறுநாள் புதன்கிழமை காலை, மாமியாா் எழுந்து பாா்த்தபோது, வீட்டில் அனுராதாவைக் காணவில்லை. வீட்டின் கதவுகள் திறந்து கிடந்துள்ளன. இதனையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தேடியுள்ளனா். அப்போது பக்கத்து வீட்டு கிணற்றில் அனுராதா கிடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸாா், தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் அனுராதாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அனுராதா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.
கே. கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...