92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் கரோனா நிவாரணம் கேட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 10:10 pm

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் கரோனா நிவாரணம் கேட்டு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் தனியாா் பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, தங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனியாா் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கம் சாா்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவா் எஸ். செல்வம் தலைமை வகித்தாா். செயலாளா் செந்தில்குமாா் முன்னிலை வைத்தாா். ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தை தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.