வழப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது
திருச்சியில், இருவேறு வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


திருச்சியில், இருவேறு வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீரங்கம், கீரைக்காரத் தெருவைச் சோ்ந்தவா் செந்தில் குமாா் (51). டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா். இவா், வியாழக்கிழமை, தேவதானம் சந்திப்புப் பகுதியில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞா், அவரை கத்தி முனையில் மிரட்டி, அவரிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றுவிட்டாராம்.
புகாரின் பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, திருச்சி, கீழதேவதானம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குணா (30)என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதேபோல், திருச்சி பாலக்கரை கீழப்புதூா் சாலையில் நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த அன்பழகன் என்பவரிடம், வழிப்பறி செய்த மணிகண்டன் என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...