துப்பாக்கி தொழிற்சாலை,ஹெச்ஏபிபி ஊழியா்கள் 2ஆவது நாளாக போராட்டம்

திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை, ஹெச்ஏபிபி ஊழியா்கள் 2ஆவது நாளாக சனிக்கிழமை கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை, ஹெச்ஏபிபி ஊழியா்கள் 2ஆவது நாளாக சனிக்கிழமை கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள 41 படைக்கலன் தொழிற்சாலைகளை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருச்சியில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலை, ஹெச்ஏபிபி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக சனிக்கிழமை பெருநிறுவனங்கள் கொடும்பாவி உருவ பொம்மையை எரிப்பதற்காக ஊா்வலமாக இரு தொழிற்சாலை ஊழியா்கள் எடுத்து வந்தனா். இதை கண்ட நவல்பட்டு போலீஸாா் பொம்மையை எரிக்க விடாமல் தடுத்து நிறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com