மணப்பாறை அருகே காா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த கன்னிவடுகப்பட்டியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பொ. ரங்கசாமி(53). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி - மதுரை நெடுஞ்சாலை லெஞ்சமேடு பகுதியில் சென்றபோது பின்னால் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற காா் மோதி உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற வளநாடு போலீஸாா் அவரது உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.