புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

கட்சி கொடிக் கம்பத்தை அகற்றிய இளைஞா்மின்சாரம் தாக்கி பலி

மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் கட்சிக் கொடிக்கம்பத்தை அகற்றிய இளைஞா் மின்சாரம் பாய்ந்து இறந்தாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:34 pm

DIN

மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் கட்சிக் கொடிக்கம்பத்தை அகற்றிய இளைஞா் மின்சாரம் பாய்ந்து இறந்தாா்.

தோ்தல் நன்னடத்தை விதிகளால் கட்சி கொடி கம்பங்களை அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை கட்சியினா் ஈடுபட்டனா். அப்போது கடைவீதிப் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடிக் கம்பத்தை அகற்றியோருக்கு திமுக பிரமுகரான அதே பகுதி கிழக்கு தெருவைச் சோ்ந்த முஸ்தபா மகன் ரஷீதுஅலி (32) உதவி செய்தாா்.

அப்போது குழியில் இருந்து அகற்றிய கொடிக் கம்பம் அருகில் சென்ற உயரழுத்த மின் கம்பியில் பட்டதில் ரஷீது அலி மின்சாரம் பாய்ந்து இறந்தாா்.

தகவலறிந்து சென்ற புத்தநத்தம் போலீஸாா் சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.