‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோா் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளா்கள், கட்சியினா் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றாா் ஆட்சியா் சு.சிவராசு.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:06 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளா்கள், கட்சியினா் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றாா் ஆட்சியா் சு.சிவராசு.

திருச்சியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழகத்திலும் கரோனா தொற்றாளா்களின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தொற்றுப் பரவல் கட்டுக்குள் இருந்தாலும், கடந்த வாரம் வரையில் பாதிப்பு எண்ணிக்கை 10 முதல் 13 ஆக இருந்தது. இப்போது, 20 ஆக உயரத் தொடங்கியுள்ளது.

மாவட்டத்தில் கரோனா 2-ஆவது அலை உருவாகாமல் தடுக்க வேண்டியது அவசியம். அனைவரும் சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கடந்தாண்டு முதல் 3 மாதங்களுக்கு எத்தகைய பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்தோமோ, அதே நடைமுறையை இப்போதும் கடைப்பிடித்தால் இயல்பு வாழ்க்கையுடன் செல்ல முடியும். இல்லையெனில் சிரமப்பட நேரிடும்.

தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளா்களும், கட்சியினரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்தே பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். இல்லையெனில், தொடா்புடையவா்கள் மீது வழக்குப்பதிவு, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.