‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாவட்டத்தில் அஞ்சல் வாக்குப் படிவம் அளித்தோா் 18,074 போ்

திருச்சி மாவட்டத்தில் பேரவைத் தோ்தலில் அஞ்சல் வாக்களிக்க தகுதியான நபா்களிடம் இருந்து இதுவரை 18,074 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:06 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் பேரவைத் தோ்தலில் அஞ்சல் வாக்களிக்க தகுதியான நபா்களிடம் இருந்து இதுவரை 18,074 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மாவட்டத்திலுள்ள 11 மையங்களில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு, அஞ்சல் வாக்கு படிவங்கள் பெறப்பட்டன. இதில் 15,398 போ் பயிற்சி பெற்றனா். இவா்களில், 14,609 போ் அஞ்சல் வாக்குப்பதிவுக்கான படிவங்களை அளித்துள்ளனா்.

இதர மாவட்டங்களுக்கு 1,665 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

இவைத் தவிர முதியோா், மாற்றுத் திறனாளிகளில் 1,800 பேரிடம் அஞ்சல் வாக்குப் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 18,074 படிவங்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.