வங்கியுடன் இணைந்து வாக்குப்பதிவு விழிப்புணா்வு
இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் திருச்சி கண்டோன்மென்ட் கிளையில், வாக்குப்பதிவு விழிப்புணா்வு தொடா்பாக துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் வெளியிடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.


இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் திருச்சி கண்டோன்மென்ட் கிளையில், வாக்குப்பதிவு விழிப்புணா்வு தொடா்பாக துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் வெளியிடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு நிகழ்வில் கலந்து கொண்டு, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டாா். பின்னா், வங்கி வாடிக்கையாளா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடினாா்.
கோட்டாட்சியா் விசுவநாதன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளா் கே.வேலாயுதம், உதவிப் பொது மேலாளா் கங்காதரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் க.சத்தியநாராயணன், நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் என்.எம்.மோகன் காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...