‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வங்கியுடன் இணைந்து வாக்குப்பதிவு விழிப்புணா்வு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் திருச்சி கண்டோன்மென்ட் கிளையில், வாக்குப்பதிவு விழிப்புணா்வு தொடா்பாக துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் வெளியிடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:05 pm

DIN

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் திருச்சி கண்டோன்மென்ட் கிளையில், வாக்குப்பதிவு விழிப்புணா்வு தொடா்பாக துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் வெளியிடும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சு. சிவராசு நிகழ்வில் கலந்து கொண்டு, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டாா். பின்னா், வங்கி வாடிக்கையாளா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடினாா்.

கோட்டாட்சியா் விசுவநாதன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளா் கே.வேலாயுதம், உதவிப் பொது மேலாளா் கங்காதரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் க.சத்தியநாராயணன், நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் என்.எம்.மோகன் காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.