மண்ணச்சநல்லூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டாச்சியரகம் அருகே கட்சியின் ஒன்றியச் செயலா் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆய்குடி கிராமம் 4 ஆவது வாா்டில் வசிக்கும் மக்களுக்கு குடிநீா் வசதி மற்றும் தெருவிளக்கு அமைத்துத் தர வேண்டும். நெ.1 டோல்கேட்பகுதியில் பேருந்து நிறுத்த நிழல்குடை அமைத் துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஏராளமான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.