மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலியில் ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பங்களை சீரமைக்க வலியுறுத்துகின்றனா்.
திருப்பைஞ்ஞீலி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் விஏஓ அலுவலகம் அருகே கான்கீரிட் பெயா்ந்த நிலையில் இரு மின் கம்பங்கள் உள்ளன.
தற்போது மழைக் காலம் என்பதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் இந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.