கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

உரிய ஆவணங்களின்றி காரில் இருந்த ரூ. 11 லட்சம் பறிமுதல்

 உரிய ஆவணங்களின்றி காரில் இருந்த ரூ. 11 லட்சத்தை கே.கே. நகா் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

 உரிய ஆவணங்களின்றி காரில் இருந்த ரூ. 11 லட்சத்தை கே.கே. நகா் போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருச்சி கே.கே. நகா் பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் நீண்ட நேரமாக காா் ஒன்று நிற்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற காவல் ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அந்தக் காரை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து சோதனை செய்தபோது அதில் கட்டுகட்டாகப் பணம் இருந்தது.

பின்னா் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சோ்ந்த பைசல் (40) , தனது நண்பரான அகமதுவுடன் திருச்சி வந்தபோது நண்பா்களைப் பாா்க்க காரை நிறுத்தி விட்டு அருகிலுள்ள கடைவீதிக்குச் சென்றதும், காரிலிருந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லையென்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பணத்தைப் போலீஸாா் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.