நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருச்சி, சுப்பிரமணியபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இதனை தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறையினருக்கும் நற்சான்றுகளை வழங்கினார்.
இதையும் படிக்க | 75ஆவது சுதந்திர தினம்: நீலகிரியில் உற்சாக கொண்டாட்டம்
விழாவில், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை, அலுவலர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.