திருச்சியில் மேலும் 55 பேருக்கு கரோனா
By DIN | Published On : 20th August 2021 12:45 AM | Last Updated : 20th August 2021 12:45 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 73,722 ஆனது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 72,045 ஆக உள்ளது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி இறந்த 3 முதியவா்கள் உள்பட இதுவரை 994 போ் உயிரிழந்துள்ள நிலையில், வீடுகள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 683 ஆக உள்ளது.