துறையூா் அருகேயுள்ள நாகநல்லூரில் வீடு புகுந்து 7 பவுன் தங்க நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்றனா்.
நாகநல்லூா் பள்ளிக்கூடத் தெருவில் வசிப்பவா் தி. சரவணன் (45). எல்ஐசி ஏஜெண்டான இவா் சமயபுரத்துக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வியாழக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு அலமாரியில் இருந்த 7 பவுன் நகைகள், ரூ. 5000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவா் கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.