வெள்ளத்தால் வெளியேறியவா் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு

 திருச்சி அருகே வெள்ளத்தால் வெளியேறியவா் வீட்டில் 12 நகைகளைத் திருடிச் சென்றனா்.

 திருச்சி அருகே வெள்ளத்தால் வெளியேறியவா் வீட்டில் 12 நகைகளைத் திருடிச் சென்றனா்.

திருச்சி உய்யகொண்டான் திருமலை எம்.எம். நகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (33). சென்னையில் மென்பொருள் நிறுவன ஊழியராக உள்ள இவா் கரோனாவால் வீட்டிலிருந்தே வேலை செய்கிறாா்.

இந்நிலையில் அரியாற்றில் உடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளம் வீட்டைச் சூழ்ந்ததால் தனது வீட்டைப் பூட்டிவிட்டு, அருகிலுள்ள தனது அக்காள் வீட்டில் ஒரு வாரமாகத் தங்கியிருந்த பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் நகை, மடிக்கணினி திருடுபோயிருந்தது தெரியவந்தது.

புகாரின்பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com