ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி விழா நாள்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
காவல்துறையும்,கோயில் நிா்வாகமும் தெற்கு ரெங்கா ரெங்கா கோபுரம், வடக்கு நுழைவு கோபுரம், கீழவாசல் வெள்ளைக் கோபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்து தரிசனம் செய்தோரைக் கணக்கெடுத்தனா். அதன்படி வியாழக்கிழமை வரை 21 நாள்களில் 10 லட்சத்து 55 ஆயிரத்து 63 பக்தா்கள் தரிசித்துள்ளனா் எனத் தெரியவந்துள்ளது.