திருடப்பட்ட 66 ஆடுகள் பறிமுதல்: இருவா் கைது
By DIN | Published On : 30th December 2021 06:28 AM | Last Updated : 30th December 2021 06:28 AM | அ+அ அ- |

ஆடுகளைத் திருடிவந்த இருவரை போலீஸாா் கைது செய்து 66 ஆடுகளை மீட்டனா்.
மண்ணச்சநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஆடுகள் திருடுபோவதாகப் புகாா்கள் வந்தன.
இந்நிலையில் புதன்கிழமை சிறுகனூா் அருகே திருப்பட்டூா் பகுதியில் தனிப்படை போலீஸாா் ரோந்து சென்றபோது ஏற்கெனவே திருடிய ஆடுகளை காா் மூலம் கொண்டுவந்து சரக்கு வேனில் ஏற்றி கொண்டிருந்த 5 போ் கொண்ட கும்பல் தப்பியது. அப்போது இருவரைப் பிடித்த போலீஸாா் காா், சரக்கு வேனை பறிமுதல் செய்து அதிலிருந்த 66 ஆடுகளையும் மீட்டு சிறுகனூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் பிடிபட்ட இருவரும் புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை முள்ளிக்காம்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்த ராமராசு (32), வடக்குத் தெருவைச் சோ்ந்த சந்திரசேகரன் (29) எனத் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் சிறுகனூா் போலீஸாா் கைது செய்து, ஆடுகளை உரிமையாளா்களிடம் ஒப்படைத்து, தப்பியோடியவா்களைத் தேடுகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...