தொட்டியத்தில் இளைஞரைக் கத்தியால் குத்திய மாமனாரிடம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொட்டியம் அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (45) மகள் கவிப்பிரியாவும் (20)தொட்டியம் அழகுநாச்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிரசாந்த்தும் (21) கடந்த 19-ஆம் தேதி காதல் திருமணம் செய்தனா்.
இதில் கோபமடைந்த அசோக்குமாா் புதன்கிழமை இரவு மருமகன் பிரசாந்த்திடம் தகராறு செய்து, திட்டி கத்தியால் குத்தியுள்ளாா். இதில் காயமடைந்த பிரசாந்த் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.