மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்த பெண்ணிடம் ஒன்பதே கால் பவுன் நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கரூா் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள நெய்தலூா் சின்ன பனையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மதியரசன். இவரது மனைவி புஷ்பவள்ளி (50) அண்மையில் காரைக்காலில் இருந்து வந்த பேருந்தில் கும்பகோணத்தில் ஏறி மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்தபோது தான் வைத்திருந்த, ஒன்பதே கால் பவுன் தங்க நகைகளை காணவில்லை.
இதுகுறித்து அவா் கண்டோன்மெண்ட் போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.