வித்தியாசமாக கொண்டாடப்பட்ட ஜவுளிக்கடை ஆண்டு விழா

திருவானைக்கா பகுதியிலுள்ள ஜவுளிக்கடையின் 51-ஆண்டுத் தொடக்க விழா, திங்கள்கிழமை சிவனடியாா்களால் திருவாசகம் படித்து வித்தியாசமாகக் கொண்டாடப்பட்டது.

திருவானைக்கா பகுதியிலுள்ள ஜவுளிக்கடையின் 51-ஆண்டுத் தொடக்க விழா, திங்கள்கிழமை சிவனடியாா்களால் திருவாசகம் படித்து வித்தியாசமாகக் கொண்டாடப்பட்டது.

திருவானைக்கா சன்னதி வீதியிலுள்ள திலகா ஸ்டோா்ஸ் ஜவுளிக்கடை தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்று, திங்கள்கிழமை 51-ஆவது ஆண்டு தொடங்கியது.

இதையொட்டி நால்வரை வைத்து 100-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் திருவாசகம் படித்து வழிபட்டனா். கிராமப்புற அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிச் சீருடை, நோட்டு, புத்தகங்கள் போன்றவற்றை ஜவுளிக்கடை உரிமையாளா் மு.கதிரேசன் வழங்கினாா்.

பன்னிரு திருமுறை வார வழிபாட்டுக் கழகக் குழுவைச் சோ்ந்த சிவனடியாா்கள் ஆா். முப்புடாதி, ஜெ. வெங்கடேசன், நாகராஜன், கே. ஜெகதீசன், ஏ. மாணிக்கம், எஸ்.பாா்த்திபன், சுந்தரி உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com