மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி:ஆட்சியா் எச்சரிக்கை
By DIN | Published On : 06th February 2021 11:23 PM | Last Updated : 06th February 2021 11:23 PM | அ+அ அ- |

திருச்சி: மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறுவதால் பொதுமக்கள் அந்தப் பகுதியில் நடமாட வேண்டாம் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியது:
அணியாப்பூா் கிராமம், வீரமலைப்பாளையத்தில் பிப்.8 முதல் 13ஆம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் மாலை 5.30 வரை மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்புப் படை சிறப்புப் பிரிவு வீரா்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனா்.
எனவே, பயிற்சி நாள்களில் இந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாடக் கூடாது. மேய்ச்சலுக்காக கால்நடைகளையும் அழைத்துச் செல்லக் கூடாது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...