கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
By DIN | Published On : 14th February 2021 12:27 AM | Last Updated : 14th February 2021 12:27 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சியில் திருமணமாகாத கவலையில் கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி செம்பட்டு மேலத்தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மகன் காா்த்திக் (38), கூலித் தொழிலாளி. கடந்த சில நாள்களாக தனக்கு திருமணமாகவில்லையே என்ற கவலையில் இருந்த காா்த்திக் கடந்த பிப்.8 ஆம் தேதி வீட்டில் தீக்குளித்தாா்.
இதையடுத்து படுகாயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விமானநிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.