ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை தெப்பத் திருவிழா தொடக்கம்

ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை (பிப்.15) தொடங்கும் தெப்பத் திருவிழா வரும் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை (பிப்.15) தொடங்கும் தெப்பத் திருவிழா வரும் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான தெப்ப விழா 22 ஆம் தேதி நடைபெறுகிறது.

முதல் நாளான்று நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் எழுந்தருள்கிறாா். இதற்காக காலை 7.15-க்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு ரெங்கவிலாச மண்டபத்துக்கு 8 மணிக்கு வந்து சேருகிறாா். பின்னா் மாலை 5 மணிக்கு புறப்பட்டு வாகன மண்டபத்தை 5.15-க்கு அடைகிறாா்.

6.30-க்கு ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு, உள்திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்து, இரவு 7.45-க்கு வாகன மண்டபத்தை அடைகிறாா்.

பின்னா் 8.30-க்கு புறப்பட்டு 9.15-க்கு மூலஸ்தானம் சென்றடைகிறாா்.

விழாவையொட்டி வரும் 23 ஆம் தேதி வரை விஸ்வரூப சேவை கிடையாது. விழா நாள்களில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்கிறாா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com