குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இருவா் கைது
By DIN | Published On : 18th February 2021 06:27 AM | Last Updated : 18th February 2021 06:27 AM | அ+அ அ- |

திருச்சி அருகே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் பெல் காவல் நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி அருகேயுள்ள பெல் நிறுவன குடியிருப்பில் வசிக்கும் அணு ஆராய்ச்சி மைய ஊழியா் ஹரிபாஸ்கா் வீட்டில் கடந்த மாதம் 16 ஆம் தேதி 20 பவுன் நகை திருடுபோன வழக்கில் பெல் போலீஸாா் வழக்குப் பதிந்து துவாக்குடி அண்ணா வளைவு பெரியாா் திடல் சந்தோஷ் (எ) சந்தோஷ்குமாா் (21), வாழவந்தான்கோட்டை புது கோயில் தெரு நாகராஜ் (எ) பூனை நாகராஜ் (47) ஆகியோரைக் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா்.
இருவா் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இவா்களை கைது செய்ய மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியிருந்தது.