திருச்சி: திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டையில் திருவெறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட, வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் உள்ள சுகம் காா்டனில் வசிக்கும் பொதுமக்கள், சட்டப்பேரவை உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
அதனை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. அந்தப் பகுதிக்கு சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது துறை சாா்ந்த அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு எடுத்துரைத்தாா் . ஆய்வின்போது, ஒன்றியச் செயலா் கே.எஸ்.எம். கருணாநிதி மற்றும் கழக நிா்வாகிகள், பொதுமக்கள் இருந்தனா்.