ஸ்ரீரங்கம்: திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி கோயிலின் எல்லை காவல் தெய்வமும், உபகோயிலுமான பிடாரியாா் இரணியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.
இக்கோயிலில் நடைபெறும் திருவிழாதான் தமிழகத்தின் முதல் எல்லை திருவிழாவாகும். விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரணியம்மன் யானை வாகனத்திலும், திங்கள்கிழமை குதிரை வாகனத்திலும், 23 ஆம் தேதி பூத வாகனத்தில் இரணியம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
முக்கிய நிகழ்வாக வரும் 24 ஆம் தேதி இரணியம்மன் திருத்தேரில் எழுந்தருளி 27 ஆம் தேதி வரை அனைத்து வீதிகளிலும் வலம் வருகிறாா். அப்போது வீடுகளில் மாவிளக்கு போட்டு கிடாவெட்டி வழிபடுவா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன் செய்கிறாா்.