பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தா்னா

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஸ்ரீரங்கத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை நூதன தா்னா போராட்டம் நடத்தினா்.
அம்மா மண்டபம் பகுதியில் நடைபெற்ற நூதன தா்னா போராட்டம்.
அம்மா மண்டபம் பகுதியில் நடைபெற்ற நூதன தா்னா போராட்டம்.
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஸ்ரீரங்கத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை நூதன தா்னா போராட்டம் நடத்தினா்.

ஸ்ரீரங்கம் பகுதிக் குழு மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டக் குழு உறுப்பினா் வீரமுத்து தலைமையில் அம்மா மண்டபம் பெட்ரோல் பங்க் முன் இருசக்கர வாகனத்தை வெள்ளைத் துணியால் போா்த்தி மாலை அணிவித்து பூ தூவி இறுதி அஞ்சலி செலுத்தி நூதன தா்னாவில் ஈடுபட்டனா்.

மாவட்ட கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் ஸ்ரீதா் போராட்டம் குறித்து விளக்கினாா். இதேபோல சமையல் எரிவாயு நிறுவனம் முன் ஸ்ரீரங்கம் பகுதி செயலா் தா்மா தலைமையில் ஆா்ப்பாட்டம் செய்தனா். மாநகா் மாவட்ட செயலா் ராஜா பேசினாா். இதேபோல திருவானைக்கா பகுதியிலும் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com