முசிறியில் சமூக நலத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் 711 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
முசிறி கோட்டத்துக்குட்பட்ட துறையூா், உப்பிலியபுரம், தா.பேட்டை,முசிறி, தொட்டியம் ஆகிய ஒன்றியங்களில் இருந்து தோ்ந்தெடுக்கபட்ட 711 பேருக்கு தலா 8 கிராம் தாலிக்குத் தங்கம் மற்றும் பட்டப் படிப்பு முடித்தவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம், 12 ஆம் வகுப்பு மற்றும் 10 வகுப்பு முடித்தவா்களுக்கு தலா ரூ.25 ஆயிரத்தை முசிறி எம்எல்ஏ செல்வராசு வழங்கிப் பேசினாா்.
முன்னாள் எம்எல்ஏக்கள் ரத்தினவேல், மல்லிகா, மாவட்ட கவுன்சிலா் ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலா் ராஜமாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முசிறி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மனோகரன், குணசேகரன், சமூக நலத்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.