துறையூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
புத்தனாம்பட்டி தனியாா் கல்லூரி அருகே வசிப்பவா் கி. பால்ராஜ் (66). இவா் வியாழக்கிழமை அந்தப் பகுதி கிணற்றில் தவறி விழுந்து மேலே ஏற முடியாமல் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாா். தகவலறிந்து வந்த துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் அறிவழகன் தலைமையிலானோா் அவரை உயிருடன் மீட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.