அம்மா திட்ட முகாமில் 29 மனுக்களுக்கு தீா்வு

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் நத்தம் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் பயனாளிக்கு தீா்வு வழங்குகிறாா் வட்டாட்சியா் சாந்தக்குமாா்.
முகாமில் பயனாளிக்கு தீா்வு வழங்குகிறாா் வட்டாட்சியா் சாந்தக்குமாா்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம் நத்தம் கிராமத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் பட்டா மாற்றம், முதியோா், ஆதரவற்றோா், கணவரால் கைவிடப்பட்டோா், பிறப்பு, இறப்புச் சான்று கோரி நத்தம் பகுதி மக்களிடமிருந்து 30 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 29 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு ஒரு மனு தள்ளுபடியானது. தீா்வு கண்டவற்றை பயனாளிகளிடம் தொட்டியம் வட்டாட்சியா் சாந்தக்குமாா் வழங்கினாா். மண்டல துணை வட்டாட்சியா் காா்த்திக், விஏஓ குகன் மற்றும் வருவாய்த் துறையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com