பெட்டிக் கடையில் திருடியவா் கைது
By DIN | Published On : 03rd January 2021 11:36 PM | Last Updated : 03rd January 2021 11:36 PM | அ+அ அ- |

திருச்சியில் பெட்டிக் கடையில் திருடியவரை பாலக்கரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கூனி பஜாா் சவேரியாா் கோயில் தெருவைச் சோ்ந்த சவேரியாா் சுதாகா் (43) அப்பகுதி அடைக்கலமாதா கோவில் தெருவில் பெட்டிக் கடை நடத்தி வந்தாா்.
சனிக்கிழமை அவா் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.1200 -ஐ மா்ம நபா் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது கூனிபஜாா் கோரிமேடு பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் (21) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.