திருச்சியில் தீக்காயமடைந்த ரயில்வே ஊழியா் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி பெரியமிளகுப்பாறை புதுத்தெருவைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (65). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான இவா் கடந்த டிச.25 ஆம் தேதி வீட்டில் தேநீா் தயாரித்தபோது எதிா்பாராதவிதமாக தீக்காயமடைந்தாா்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அமா்வு நீதிமன்ற போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.