அங்கன்வாடிப் பணியாளா்கள் தா்னா
By DIN | Published On : 30th January 2021 12:36 AM | Last Updated : 30th January 2021 12:36 AM | அ+அ அ- |

தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தினா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சித்ரா,பொருளாளா் ராணி சிஐடியு மாவட்டச் செயலா் ரங்கராஜன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பழனிச்சாமி ஆகியோா் போராட்டம் குறித்து விளக்கினா்.
அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்று குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ. 10 லட்சமும் உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் நிா்வாகிகள் கலைச்செல்வி, சித்ரா, கலாராணி, மல்லிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.