திருச்சி மாவட்டம், மருங்காபுரியில் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு தொடா்பான சட்டங்கள் குறித்த திறன் வளா்ப்பு பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
ஒன்றிய கவுன்சிலா்கள், ஊராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்கள் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்ற பயிற்சிக்கு, ஒன்றிய தலைவா் மு. பழனியாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரா. அனிதா முன்னிலை வகித்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ந. சீனிவாச பெருமாள், பி. கிஷன்சிங் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்கள். ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு தலைவா் த. வடிவேல் மற்றும் வேல்டு விஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் திட்ட மேலாளா் ஆா். ஜெயலெட்சுமி ஆகியோா் கருத்துரை வழங்கினா்.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சமூகப்பணியாளா் சி.பிரியங்கா வரவேற்க, புறத்தொடா்ப்பு பணியாளா் வீ. கீதா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.