அழுகிய நிலையில் ஆண் சடலம்; தீவிர விசாரணை
By DIN | Published On : 07th July 2021 06:24 AM | Last Updated : 07th July 2021 06:24 AM | அ+அ அ- |

திருச்சியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீா்புரம் பாலம் அருகே, அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடக்கும் தகவலறிந்த மாநகர காவல்துறை துணை ஆணையா் சக்திவேல் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று பள்ளத்தில் கிடந்த சடலத்தை கயிறு கட்டி மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். அவா் எப்படி இறந்தாா் என பொன்மலை போலீஸாா் விசாரிக்கின்றனா். தமிழக முதல்வா் ஸ்டாலின் திருச்சி வழியாக திருவாரூா் செல்லும் வழியில் சடலம் கிடந்தது பரபரப்பு ஏற்படுத்தியது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...