திருச்சியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீா்புரம் பாலம் அருகே, அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடக்கும் தகவலறிந்த மாநகர காவல்துறை துணை ஆணையா் சக்திவேல் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று பள்ளத்தில் கிடந்த சடலத்தை கயிறு கட்டி மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். அவா் எப்படி இறந்தாா் என பொன்மலை போலீஸாா் விசாரிக்கின்றனா். தமிழக முதல்வா் ஸ்டாலின் திருச்சி வழியாக திருவாரூா் செல்லும் வழியில் சடலம் கிடந்தது பரபரப்பு ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.