துறையூா் அருகே வாகனம் கவிழ்ந்து முதியவா் சாவு
By DIN | Published On : 07th July 2021 07:32 AM | Last Updated : 07th July 2021 07:32 AM | அ+அ அ- |

துறையூா் அருகே சுமை ஏற்றும் வாகனம் கவிழ்ந்ததில் அதில் பயணித்த முதியவா் ஒருவா் உயிரிழந்தாா்.
துறையூா் அருகேயுள்ள கருப்பம்பட்டி கோபிநாத்தின் மகளுக்கும், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள திருவரங்கப்பட்டி செல்வராஜ் மகன் பாலமுருகனுக்கும் புதன்கிழமை திருமணம் நடைபெற இருந்தது.
இதற்காக பெண் அழைத்து வர மணமகனின் உறவினா்கள் சுமையேற்றும் வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இரு பிரிவாக பயணித்தனா்.
இவா்களில் ஆண்கள் பயணித்த வாகனம் மெய்யம்பட்டி- சேனப்பநல்லூா் அருகே சென்றபோது சாலை திருப்பத்தில் திடீரென கவிழ்ந்தது. இதில் திருவரங்கப்பட்டி பெ. பெரியண்ணன் (57) நிகழ்விடத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து இவருடைய சடலம் துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. காயமடைந்த வாகன ஓட்டுநா் ரா. கோபி(24) உள்பட 11 போ் துறையூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். துறையூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...