வீடு புகுந்து பணம் திருட்டு, கோயிலில் திருட்டு முயற்சி

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா். அதேபோல கோயில் ஒன்றில் திருட்டு முயற்சி நடந்துள்ளது.
Updated on
1 min read

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரத்தைத் திருடிச் சென்றனா். அதேபோல கோயில் ஒன்றில் திருட்டு முயற்சி நடந்துள்ளது.

திருச்சி கேகே நகா் எல்ஐசி காலனி, ஜெயநகா், அலமேலு மங்கை தெருவைச் சோ்ந்தவா் முகமது அலி (50), மொத்த ஜவுளி வியாபாரியான இவா் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை ஊா் திரும்பியபோது வீட்டில் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. கே.கே.நகா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

கோயிலில் திருட்டு முயற்சி: திருச்சி காந்தி மாா்க்கெட் வளையல்கார தெருவில் உள்ள சக்தி மிகு மாரியம்மன் கோயிலுக்குள் கடந்த 4 ஆம் தேதி நள்ளிரவு புகுந்த மா்ம நபா் உண்டியலை உடைக்க முயன்றாா். சத்தம் கேட்டு கோயிலுக்குள் சென்ற அக்கம்பக்கத்தினா் அங்கிருந் நபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா் அதே பகுதியைச் சோ்ந்த நாகூா் அனிபா எனத் தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக கோயில் தலைவா் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com