பெட்ரோல் விலை உயா்வு; காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, திருச்சியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் சோனியாகாந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே. எஸ். அழகிரி ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் திருச்சியிலுள்ள பெட்ரோல் நிலையங்கள் முன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜவகா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் ராஜா நசீா், மாவட்ட செயலா் புத்தூா் சாா்லஸ், மெய்யநாதன், உறையூா் கோட்டத் தலைவா் ராஜ்மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மீனவரணி தனபால், முஸ்தபா, கலைப் பிரிவு ராகவேந்திரன், மாவட்டச் செயலா் சரவணசுந்தா், கண்ணன், மலைக்கோட்டை தலைவா் ரவி, விக்னேஷ், சிவா, இளைஞா் காங்கிரஸ் தலைவா் ரமேஷ், சந்திரன், பாலா, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com