இதுவரை 66,452 டன் நெல் கொள்முதல்

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 66 ஆயிரத்து 452 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 66 ஆயிரத்து 452 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டத்துக்குள்பட்ட உப்பிலியபுரம் பகுதியில் நவரை பருவத்தில் ஜூன் 3 முதல் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

நெல்வரத்து அதிகமாக உள்ளதால் ஜூலை 2 முதல் கூடுதலாக 3 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

வைரிச்செட்டிப்பாளையம், பி.மேட்டூா், எரக்குடி ஆகிய இடங்களில் ஏற்கெனவே உள்ள நிலையங்களுடன், கூடுதலாக தலா ஒரு கொள்முதல் நிலையம் என மொத்தம் 6 இடங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது. இவைதவிர, தங்கம்நகா், ஆலத்துடையான்பட்டியிலும் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது.

இந்த 8 மையங்களின் மூலம் இதுவரை 6,332 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்தாண்டு ஒரு மையத்தை மட்டுமே திறந்து 1,064 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இப்போது, 6 மடங்கு கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முழுவதும் நடப்பு பருவத்தில் 65 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரை, 66,452 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 51 மையங்கள் மூலம் 44,537 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

சன்ன ரகம் ரூ.1,958, பொது ரகம் ரூ.1,918 என்ற விலையில் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்படுகிறது. இதுவரை 13,970 விவசாயிகளுக்கு ரூ.120.30 கோடி மின்பறிமாற்றச் சேவை மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு எந்தக் காலதாமதம் இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com