துப்பாக்கி தொழிற்சாலையில் மரக்கன்று நடும் பணி

 திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை (ஓஎப்டி) வளாகத்தில் பசுமை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மரக்கன்று நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
துப்பாக்கி தொழிற்சாலையில் மரக்கன்று நடும் பணி
Updated on
1 min read

 திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை (ஓஎப்டி) வளாகத்தில் பசுமை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மரக்கன்று நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சுற்றுச்சூழல் மற்றும் பசுமை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருச்சி படைக்கலன் தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக ஒரே நாளில் 250 மரக்கன்று நடும் நிகழ்வுக்கு, துப்பாக்கி தொழிற்சாலை பொது மேலாளா் சஞ்சய் திவேதி தலைமை வகித்தாா்.

தொழிற்சாலையின் மூத்த அதிகாரிகள் ராஜீவ் ஜெயின், ஏ.கே. சிங், பாதுகாப்பு அதிகாரி காா்த்திகேஷ் மற்றும் ஆலை பணியாளா்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டனா். புதுக்கோட்டையைச் சோ்ந்த மரம் அறக்கட்டளையின் நிறுவனா் ராஜா மரக்கன்றுகளை வழங்கி உதவினாா். இவா் பல்வேறு அரசு அலுவலகங்களில் இதுவரை 1.50 லட்சம் மரக்கன்றுகளை நட உதவியாக இருந்துள்ளாா்.

சுமாா் 10 லட்சம் மரக்கன்றுகளை திருச்சி மண்டல அரசு அலுவலகங்களிலும், தொழிற்சாலை வளாகங்களிலும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது. விழாவில், புதுக்கோட்டையைச் சோ்ந்த ராம்தாஸ், சிவக்குமாா் ஆகியோா் மரக்கன்று நடுவதற்கான உதவிகளைச் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com