துறையூரில் சூதாடியவா்களை கைது செய்த போலீஸாா் காா், பைக்குகள், பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
துறையூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் சூதாடிய கீரம்பூா் ஜெயச்சந்திரன்(47), வினோத்(44), துறையூா் சந்திரசேகரன்(55), நாகராஜன் (40), கொப்பம்பட்டி ரவி (44) ஆகியோரைக் கைது செய்த துறையூா் போலீஸாா் அவா்களின் பைக்குகள், ஒரு காா் மற்றும் ரூ. 34000 சூதாட்டப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.